கரூரில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் திமுகவினர் வைத்த பேனர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி. தற்போது தான் இந்த ஆட்சியில் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறியுள்ளது. இந்நிலையில், பள்ளப்பட்டி நகர திமுக சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திமுகவில் பொறுப்பு பெற்றவர்கள் வைத்த பிளக்ஸ் போர்டு இன்று வரை எடுக்கவில்லை.
குறிப்பாக பள்ளப்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம், ராஜாபேட்டை தெரு, திண்டுக்கல் மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்லும் இடமெல்லாம் திமுக போர்டுகள் தான்.
இதனால் வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிளக்ஸ் போர்டுகள் மீதும், அதை வைத்த திமுக பிரமுகர்களின் மீது தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வை படுமா ?? என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும்.
குறிப்பாக, மக்கள் அதிகம் செல்லும் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால், ஏதேனும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.