உலகப் புகழ்பெற்ற பூலாவலசு கிராமத்தில் அனுமதியின்றி நடத்த இருந்த சேவல் சண்டை தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உலக புகழ்பெற்ற பூலாம்வலசு கிராமத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்த இருந்தது. சேவல் கால்களில் கத்தி கட்டுவதால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கு காரணமாக நீதிமன்ற தடையாணை உள்ளதால், அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து அரவக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பூலாம்வலசு கிராமத்திற்கு வரக்கூடிய வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. கிராமத்திற்குள் அனுமதிக்கப்படும் உள்ளூர் வாகனங்களின் பதிவு எண்கள், பெயர், விலாசம் ஆகியவை பெற்றுக்கொண்ட பின்னர் உள்ளே அனுப்பி வைத்து வருகின்றனர்.
சேவல் சண்டை போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர், வாகன நிறுத்துமிடம், கடைகள் உள்ளிட்ட வசதிகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நபர்கள் தங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சேவல் சண்டை போட்டியில் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பது வழக்கம்.
நான்கு நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வர். ஆனால், இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அப்பகுதிக்கு வரக்கூடிய நபர்களை திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.
அதே நேரம் விழா கமிட்டியினர் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.