கரூர் : கரூரில் டெக்ஸ்டைல் வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக 15 பேர் உயிர் தப்பினர்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் இருந்து 15 பேரை ஏற்றிக்கொண்டு திருச்சி டு கரூர் பைபாஸ் ரோட்டில் ஏமூர் பெட்ரோல் பங்க் அருகில் Maxi cab வேனில் சென்று கொண்டிருந்தனர். டெக்ஸ் பார்க்கிற்கு செல்லும் வழியில் என்ஜினில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, அந்த வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
வாகன ஓட்டுநர் நந்தகுமார் வாகனத்தின் இன்ஜின் முன்பாக கரும்புகை புகை வந்ததை பார்த்து உடனடியாக வேனை நிறுத்தினார். இதனால், உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கி விட்டதால், யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வாகன முற்றிலுமாக எரிந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
This website uses cookies.