கரூரில் சலூன் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் 15 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற அடையாளம் தெரியாத பெண்மணியின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
கரூர் அடுத்த தொழில்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் முருகேசன் (29) மற்றும் கரூர் வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா கணேஷ் (29). இவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் முறையில் கரூர் மாநகரப் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் BLON சலூன் என்ற அழகு நிலையம் நடத்தி வருகின்றனர்.
இந்த சலூன் கடையில் அழகு நிலையம் மற்றும் வரவேற்பரை என இரண்டு அறைகள் அமைந்துள்ளன. கடந்த 21ஆம் தேதி பிற்பகல் சுமார் 12.05 மணியளவில் அழகு நிலையத்தின் உள்பக்க அறையில் வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்துதல் மற்றும் அழகுப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முன்பக்க வரவேற்பறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, உள்ளே நுழைந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த 15 ஆயிரம் ரொக்கத்தை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அழகு நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சிகளை கடை உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.