Categories: தமிழகம்

கோவில் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து… ஒரு நபருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி நள்ளிரவு வரை பொதுமக்கள் போராட்டம்

கரூர் : கோவில் விவகாரத்தில் ஒரு நபருக்கு மட்டுமே போலீசார் ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் நள்ளிரவில் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை கிராமத்திற்குட்பட்ட வடக்குமேட்டுப்பட்டி பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மல்லையன் ஆலயத்தில் வருடா வருடம் கோயில் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கமான நிலையில், கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்த திருவிழாவானது, மல்லையன் நாயக்கர் என்கின்ற பெருமாள் என்பவர் மட்டும் நடத்துவதாக கூறி, வாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்று பிறகு, அவரே மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ம் தேதி வழக்கு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், தனிப்பட்ட ஒருநபருக்காக மட்டும் மாடு மாலை கும்பிடும் நிகழ்ச்சி நட்த்த முடியாது என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்ததோடு, அங்கு வசிக்கும் 120 குடும்பங்களுக்கு மட்டும் தான் இந்த கோயிலும், கோயில் வழிபாட்டு முறையும் சொந்தம் என்றும் கூறி வழக்கினை முடித்து வைத்தது.

இதனையடுத்து, கடந்த 11 ம் தேதி மீண்டும் இதே காரணத்தினை வைத்து கொண்டு அந்த தனிப்பட்ட நபர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த வருடமே, இதே வழக்கு 120 குடும்பங்களுக்கு மட்டுமே உரிமை என்று கூறி, தள்ளுபடி செய்ததை ஞாபகப்படுத்தி, இந்த வழக்கினையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும்படி வெள்ளியணை காவல்நிலையத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே சுமார் 120 குடும்ப மக்கள் காத்திருந்தனர். ஆனால், எந்தவித முயற்சியும் எடுக்காத நிலையில், அந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே, காவல்துறையும், வருவாய்த்துறையும் துணை போவதாக கூறி, இரவு வரை அந்த 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரூர் தாலுக்கா அலுவலக வாயிற்படியிலேயே காத்திருந்தனர்.

ஆனால், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினரோ அந்த உயர்நீதிமன்ற உத்திரவினை மதிக்காமல், அந்த தனிப்பட்ட அதே சமுதாய மக்களை சார்ந்தவருக்கு மட்டுமே ஆதரவாக இருந்ததையடுத்து, போராட்டம் தீவிரமடைந்தது.

இந்நிலையில், தாந்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.ஆர் என்கின்ற எம்.ரகுநாதன் மற்றும் முன்னாள் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.ராமசாமி ஆகியோர் உடனே தாலுக்கா அலுவலகம் முன்பு திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நீதிகிடைக்கும் வரை கைது செய்தாலும் பரவாயில்லை, எங்களுக்கு உரிமையான இந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவினை எப்படியும் நடத்தியே ஆக வேண்டுமென்று கூறி, சுமார் இரவு 10.10 மணிவரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வெள்ளியணை பஞ்சாயத்து தலைவரும், திமுக நிர்வாகியுமான சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் எம்.ரகுநாதன், ஆர்.ராமசாமி ஆகியோர் ஒன்றிணைந்து, கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள், சென்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோவில் விவகாரத்தில் காவல்நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கட்சி வேஷ்டி மற்றும் கரைவேஷ்டிகள் பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

4 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

5 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

6 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

6 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

6 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

7 hours ago

This website uses cookies.