கரூரில் தொடர்ந்து தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவரது மகன் செல்வராஜ் (23). இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எல்லா நேரமும் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததால் கோவிந்தராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செல்வராஜ் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
மகன் செல்வராஜ் இறந்த தகவல் அறிந்த, அவரது தாய் சுமதி( 43) மன வேதனையால் விஷ விதையை குடித்ததாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சுமதியை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோது பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவிந்தராஜ் சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட தாய், மகன் ஆகிய இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.