கரூரில் தொடர்ந்து தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவரது மகன் செல்வராஜ் (23). இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எல்லா நேரமும் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததால் கோவிந்தராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செல்வராஜ் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
மகன் செல்வராஜ் இறந்த தகவல் அறிந்த, அவரது தாய் சுமதி( 43) மன வேதனையால் விஷ விதையை குடித்ததாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சுமதியை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோது பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவிந்தராஜ் சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட தாய், மகன் ஆகிய இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.