இசைவாணி விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை பார்க்கிறோம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
சென்னை: சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்தும், குறிப்பாக தெலுங்கு பேசும் பெண்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதற்கு தெலுங்கு அமைப்புகள் கண்டனங்களும் தெரிவித்தன.
அந்த வகையில், ஐக்கிய நாயுடு சம்மேளனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சென்னை எழும்பூர் போலீசார், கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்றக் காவல் வழங்கிய நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில், அவர் தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த நிலையில், நிபந்தனையின் பேரில் கையெழுத்திடுவதற்காக எழும்பூர் காவல் நிலையத்துக்கு கஸ்தூரி வந்தார்.
பின்னர் கையெழுத்து போட்டுவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி, “நான் கடந்த 4 வருடங்களாக ஹைதராபாத்தில் தான் உள்ளேன். எனது வீடும் அங்கு தான் உள்ளது. தற்போது 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறேன். இதனால் அங்கு இருந்தபோது என்னை தமிழக போலீசார் கைது செய்தனர்.
என்னுடைய வேலை, வீடு, மகனின் படிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் மீதான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி எனது வழக்கறிஞர் மூலம் முறையிட்டு உள்ளேன். இதன் மீதான விசாரணை திங்கள்கிழமை வருகிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இசைவாணி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூர கொலை.. இபிஎஸ் முக்கிய கேள்வி!
அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, “இந்த விவகாரத்தில் நடவடிக்கை இல்லை. என் மீதான கைது நடவடிக்கைக்கும், இசைவாணி விவகாரத்திலும் உள்ள நிலைமை அனைவருக்கும் தெரியும்” எனக் கூறிவிட்டுச் சென்றார். ஐயப்பன் குறித்தான பாடலில் ஐயப்பனை இழிவுபடுத்தியதாக இசைவாணி மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.