துரத்தும் நாய்களை கண்டுக்காதீங்க..! மீ டூ விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தாரா வைரமுத்து.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல வெற்றிப் படங்களுக்கு பாடல்களை எழுதி கொடுத்தவர் தான் பாடலாசிரியர் வைரமுத்து. இயக்குனர் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும்.

என் பழைய பனை ஓலைகள், வானம் தொட்டுவிடும் தூரம்தான், என் ஜன்னலின் வழியே, மெளனத்தின் சப்தங்கள், கல்வெட்டுக்கள், கொடிமரத்தின் வேர்கள், கருவாச்சி காவியம், பாற்கடல், மூன்றாம் உலகப்போர், தமிழாற்றுப்படை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை படைத்துள்ளார்.

அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் 2003 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷண்’ விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் ‘சாதனா சம்மாண்’ விருதும் பெற்றிருக்கிறார்.

இதுவரை 7,000த்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியிருக்கிறார். திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர் தான். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை வென்றவரும் வைரமுத்து மட்டும்தான்.

இதனிடையே, இவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது திரையுலகை அதிர்ச்சியாக்கியது.
இருப்பினும் வைரமுத்து மீது புகார்களை முன்வைத்தாலும் சட்டரீதியான எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை .

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்த வைரமுத்து, சமீபத்திய பேட்டியில் மறைமுகமாக இது பற்றி பேசியிருப்பதாகவே தெரிகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: ‘உங்களைத் துரத்தும் நாயைக் கண்டுகொள்ளாமலே செல்ல வேண்டும். இல்லையெனில் அது உங்களைத் துரத்திக் கொண்டே வரும்.

விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால், நாயோடு போராடுவது போலேயே வாழ்க்கை போய்விடும். நாயைக் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டே இருங்கள். நாய்கள் திரும்பி ஓடிவிடும்’ எனக் கூறி உள்ளார். இதன்மூலம் தன்மீது வைக்கப்பட்டுள்ள மீடூ குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என்றே சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

50 minutes ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

3 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

3 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.