அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று பொறியியல் மாணவர்களுக்கு KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash அறிவுரை வழங்கினார்.
கோவையில் உள்ள KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறை சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்காக CIVISTRA எனும் தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash கலந்து கொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும். சிவில் என்ஜினியர்ஸ்-க்கு பெரிய முதலீடு தேவையில்லை. நீங்கள் ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்றால் பெரிய கனவு இருந்தால் மட்டும் போதும்.
பிடித்தமான துறையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலானோர் சீக்கிரம் EARN பண்ணணும் என்று நினைக்கின்றனர். ஆனால், சீக்கிரம் LEARN பண்ண வேண்டும் என்று நினைத்தாலே போதும் வெற்றி அடையலாம்,” என்று கூறினார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.