கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சஹானா முழுநேர மாடலாகவும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்தார். இவர் கோழிக்கோட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். சஹானாவுக்கும், சஜ்ஜாத்துக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சஹானா தனது 21-வது பிறந்தநாளன்று, தான் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவருடன் வசித்து வந்த சஹானாவின் பரிதாப மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சஹானாவின் மரணம் குறித்து விசாரிக்க, சஜ்ஜத்தை காவலில் எடுத்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஹானாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். மகளின் முடிவு குறித்து சஹானாவின் தாயார் கூறுகையில் ‘என் மகள் எப்போதும் தன் கணவர் செய்த கொடுமைகளை பற்றி பேசுவாள். நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். தனது பிறந்தநாளை கொண்டாட எங்கள் அனைவரையும் அழைத்தார்’ என்றார்.
மாடலும் நடிகையுமான சஹானாவின் இந்த முடிவு கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.