கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சஹானா முழுநேர மாடலாகவும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்தார். இவர் கோழிக்கோட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். சஹானாவுக்கும், சஜ்ஜாத்துக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சஹானா தனது 21-வது பிறந்தநாளன்று, தான் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவருடன் வசித்து வந்த சஹானாவின் பரிதாப மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சஹானாவின் மரணம் குறித்து விசாரிக்க, சஜ்ஜத்தை காவலில் எடுத்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஹானாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். மகளின் முடிவு குறித்து சஹானாவின் தாயார் கூறுகையில் ‘என் மகள் எப்போதும் தன் கணவர் செய்த கொடுமைகளை பற்றி பேசுவாள். நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். தனது பிறந்தநாளை கொண்டாட எங்கள் அனைவரையும் அழைத்தார்’ என்றார்.
மாடலும் நடிகையுமான சஹானாவின் இந்த முடிவு கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.