தமிழகம்

நாட்டையே உலுக்கிய தூக்கு தண்டனை.. கிரீஷ்மா வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

குமரி கேரளாவை உலுக்கிய காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி க்ரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமன் நிர்மல் குமார் ஆகியோர் குற்றவாளிகள் எனவும் அவரது தாயார் சிந்து வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் நெய்யாற்றின்கரை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் ஆணை பிறப்பித்து இருந்த நிலையில் கடந்த 18 ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் 18 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான க்ரீஷ்மா தனது தாய் தந்தையருக்கு தான் ஒரே மகள் என்றும் தனது வயதை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்க: சமூக ஆர்வலர் கொலை.. மிக மோசமான விளைவை சந்திக்கும் திமுக : அண்ணாமலை வார்னிங்!

அப்போது ஷாரோனுக்கு ஆதரவாக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றவாளி க்ரீஷ்மா மனித குணத்தை மீறி அரக்க குணம் கொண்டு காதல் என்ற பெயரில் நம்ப வைத்து ஏமாற்றி இந்த கொலையை செய்துள்ளார்.

இதனால் ஒரு இளம் வாலிபனின் உயிர் துன்பப்பட்டு பிரிந்துள்ளது. ஆகையால் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று காலை போலீசார் குற்றவாளிகள் க்ரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமன் நிர்மல் குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 11 மணிக்கு தீர்ப்பு வழங்க நீதிமன்றம் வந்த நீதிபதி முதல் வழக்காக ஷாரோன் கொலை வழக்கிற்க்கான 586 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசிக்க துவங்கினார்.

இதில் காதலன் ஷாரோனை காதலி க்ரீஷ்மா காதல் என்ற பெயரில் நம்ப வைத்து ஷாரோனை வீட்டிற்கு அழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கெடுத்து கொலை செய்துள்ளார்.

மேலும் ஒருமுறை இல்லை பலமுறை ஷாரோனை கொலை செய்ய முயன்று கொலை செய்து உள்ளார். ஆகையால் இது முற்றிலும் திட்டமிட்ட ஒரு படுகொலை. ஆகையால் குற்றவாளியின் வயது ஒன்று நீதிமன்றத்து பொருட்டு அல்ல.

ஷாரோனை நம்ப வைத்து துரோகம் செய்ததும் மட்டுமல்லாமல், கொலையும் செய்துள்ளார் கிரீஷ்மா. சாகும் போதும் கூட காதலி தண்டிக்கப்படக்கூடாது என ஷரோன்ராஜ் கூறியுள்ளார்.

ஆகையால் குற்றவாளி க்ரீஷ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் கொலைக்கு உதவிய தாய்மாமன் நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

12 hours ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

13 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

14 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

14 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

14 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

15 hours ago

This website uses cookies.