விழுப்புரம் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4.1/2 கிலோ கஞ்சா மற்றும் சாமி சிலைகள் பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை கைது செய்தனர்.
விழுப்புரம் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேம். இவரை சந்தேகத்தின் பெயரில் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து அவர் வீட்டில் சோதனை செய்ததில் அவர் வீட்டில் 4 கிலோ 500 கிராம் கஞ்சா சிறுசிறு பாக்கெட்களாக அவர் வைத்திருந்த கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் அவர் வீட்டில் பித்தளையில் உருவான சாமி சிலைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருடன் சேர்ந்து புகழேந்தி(வயது 22) என்ற இளைஞரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வரவே அவரை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆந்திரப் பகுதியில் இருந்து வாங்கி வந்து விழுப்புரம் மற்றும் கேரளா மாநிலத்திலும் விற்பனை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான பிரேம் ஏற்கனவே பல வழக்குகளில் விழுப்புரம் மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.