Categories: தமிழகம்

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா போதை…வாடகை வீட்டில் கஞ்சா விற்பனை படுஜோர்: கேரள இளைஞர் 3 பேர் கைது..!!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா இளைஞர்களை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.

கோவை கேஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலையம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் சென்ற போலீசார் திருமலையம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையம்பாளையம் சந்திப்பில் இருந்த பேக்கரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அந்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நந்து கிருஷ்ணா (22) திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அனுராக் (22) மற்றும் அதுல் (21) என்பதும், மூவரும் கடந்த இரண்டு மாதங்களாக திருமலையம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

51 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

54 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

1 hour ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

2 hours ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.