கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருந்த கே.ஜி.எப் -2 திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியானது. இந்தியா முழுவதும் ராக்கி பாய்யின் வருகையை சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி வெளியாகிய முதல் நாளே ரசிகர்களின் பேராதரவை பெற்றது கேஜிஎப்-2.
ஓபனிங்கில் கே.ஜி.எப் சேப்டர் 2 காட்டிய வேகத்துக்கு பாகுபலி 2-வை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை என்றே தற்போது தெரிகிறது. தற்போது வரை கேஜிஎப் சேப்டர் 2 எட்டு தினங்களில் 268.63 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தி சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் வரிசையில் கே.ஜி.எப்.13-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து பாகுபலி 2 இந்த வரிசையில் ரூ.511 கோடிகள் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில் பார்த்தால் 10 வது இடத்துக்கு முன்னேறிவிடும்.
பாகுபலி 2 படத்துக்கு பெண்கள், குழந்தைகள் என குடும்ப ஆடியன்ஸ் பெருமளவில் வந்தனர். இரண்டு வாரங்களுக்கு மேல் திரையரங்கில் அந்தப் படத்தை நிலைநிறுத்தியது இவர்கள்தான். ஆனால், கேஜிஎப் சேப்டர் 2 படத்தை அதிகமும் இளைஞர்களே பார்க்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதனால், இந்த வார இறுதிக்குப் பிறகு கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் வசூல் கணிசமாகக் குறையும், அடுத்த வார இறுதிக்குப் பிறகு கிட்டத்தட்ட முழுவதும் முடிந்து விடும். அதனால் கே.ஜி.எப்.-2 வால் ஒருபோதும் பாகுபலியை தொட நெருங்க முடியாது என தெளிவாகத் தெரிகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.