கோயம்பேட்டில் கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள் 10 பேர் விளையாட்டுக்கு செல்லும் போது லிப்டில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் 5வது தளத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 23 பேர் தங்கி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றிற்காக கிளம்பி சென்றனர்.
அப்போது, ஐந்தாம் மாடியில் இருந்து இறங்கும்போது லிப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் தளம் சிக்கிக் கொண்டது. இதில் பத்து கால்பந்து வீராங்கனைகள் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து, ஓட்டல் நிர்வாகம் சார்பில் கடப்பாறைகள் கொண்டு அரை மணி நேரம் போராடி வீரர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் துரிதமாக செயல்பட்டு லிப்ட் உடைத்து வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.