தமிழகம்

கனிமொழி எங்கே? திமுக மகளிரணி எங்கே? கேள்விகளால் துளைத்தெடுத்த குஷ்பூ!

கனிமொழி எங்கே? எல்லாவற்றிற்கும் முன்வந்து பேசும் திமுக மகளிரணி எங்கே? என பாஜக பிரமுகர் குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: சென்னை தியாகராய நகரில், பாஜக பிரமுகர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, கட்சியைத்தான் பெரிதுபடுத்துகிறீர்கள். ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, எந்தக் கட்சியினரும் பேசலாம்.

நாங்கள் இருப்பது பாஜக அலுவலகம். எங்கள் பின்னால் பாஜக இருக்கிறது. அது வேற விஷயம். தயவுசெய்து இதனை அரசியல் ஆக்காதீர்கள். நீங்கள் ஆளும் மாநிலங்களில் இது நடக்கவில்லையா என கேள்வி கேட்காதீர்கள். பெண்கள் ஒன்றும் அரசியல் ஃபுட்பால் கிடையாது, இங்கேயும், அங்கேயும் தூக்கி வீசுவதற்கு.

பாதிக்கப்பட்ட பெண்ணை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியேச் சொன்னார். நிறைய பெண்கள் வெளியே சொல்ல மறுக்கிறார்கள். என்னைப் போன்று வேறு பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்த அந்தப் பெண்ணை பாராட்ட வேண்டும். அந்தப் பெண் பற்றிய தகவல்களை வெளியே யார் கொடுத்தது?

அவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். சட்ட ரீதியாக அது தவறுதான். ஏன் அது பற்றி பேசக் கிடையாது? எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் கேள்வி கேட்போம். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு, பாஜக மகளிரணி நாளை பேரணி நடத்துகிறது.

நான் மகளிர் ஆணையத்தில் இருந்துள்ளேன். மிகவும் மோசமான புகார்கள் வரும். மற்ற மாநிலங்களை ஒப்பிடாதீர்கள். என் வீட்டில் பிரச்னை நடக்கும்போது, மற்ற வீட்டில் நடக்கிறதா இல்லையா என பேசக்கூடாது. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் கல் வீசக்கூடாது.

இதையும் படிங்க: காருக்குள் இளம்பெண்ணுடன் ஐடி ஊழியர்கள் செய்த வேலை… சோதனைச்சாவடியில் டுவிஸ்ட்!

சௌமியாவை ஏன் கைது செய்தீர்கள்? கனிமொழி எங்கே? எல்லாவற்றிற்கும் முன் வந்து பேசுவார்களே, திமுக மகளிரணி எங்கே? கைதுக்கு நாங்கள் பயப்படவில்லை. திமுக சார்பாக எந்தப் பெண் குரல் கொடுத்தார்? அமைச்சர், எம்.பி யாராவது குரல் கொடுத்தார்களளா?

சீமான் பற்றி பேச விரும்பவில்லை. அவரை முதல்வரைப் பார்த்து கேள்வி கேட்கச் சொல்லுங்கள். மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? எங்கேயாவது பேசினாகளா? அரசு சொல்வதைத்தான் அவர்கள் செய்வார்கள். யார் அந்த சார்? அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

12 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

13 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

13 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

15 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.