திண்டுக்கல் : பழனியில் கோவில் திருவிழாவில் 200 ஆட்டுகிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து கோலாகலமாக நடைபெற்றது.
பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில் .
பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனோ தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 200 ஆட்டு கிடாய்கள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது.
பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு அசைவ விருந்து தயார் செய்யப்பட்டது. அதற்காக இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவில் பாத்திரங்களை பயன்டுத்தி அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து சாமி தரிசனம் செய்தனர். பெரியதுரையான் கோவிலில் விவசாயிகள் வளர்த்து கிடாய் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.