தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28). இவர் இன்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அவரை பின்தொடர்ந்து இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்தது சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கொலை நடைபெற்ற இடத்திற்கு வந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.