திண்டுக்கல் : கொடைக்கானல் பழனி சாலை வடகவுஞ்சி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறை திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது வடகவுஞ்சி மலை கிராமம். இந்த பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகின.
கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரல் மழை மற்றும் திடீர் கனமழை பெய்தது. இருப்பினும் திடீரென்று வனபகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் உள்ள வன விலங்குகள் வடகவுஞ்சி கிராம பகுதிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காத காரணத்தினால் இந்த காட்டுத் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
வரும் காலங்களில் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.