திண்டுக்கல் : கொடைக்கானலில் அதிகரித்த உறை பனியால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் வருடா வருடம் டிசம்பர் முதல் வாரத்திலேயே உறைபனி துவங்கும். தொடர் மழை காரணமாக கடந்த மாதம் துவங்க வேண்டிய பணி துவங்காமல் காலம் தாழ்த்தி டிசம்பர் கடைசி நாட்களில் இருந்து ஜனவரி பிறந்தவுடன் பனியானது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே சுமார் ஐந்து டிகிரி கீழ் உரை பனி சென்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டில் உறங்க முடியாத அளவிற்கு பாம்பார்புரம், கீழ் பூமி, மேல்மலை பகுதியான பூம்பாறை, தூண்டி, கவுன்சி, கூக்கால் மற்றும் நட்சத்திர ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உறைபனி தற்போது கொட்டி வருகிறது.
மேலும், வரும் நாட்களில் அதிக அளவு பனி இருக்கும் எனக் கூறப்படுகிறது. பகல் நேரங்களில் அதிகளவு வெயிலின் தாக்கமும், மாலை 4 மணிக்கு பனி பொழிவு துவங்கி இரவு நேரத்தில் அதிக அளவு பனிப்பொழிவு உள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை பனிப்பொழிவு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகளும், சுற்றுலாத் தலங்களை காண்பதற்கு முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டிசம்பர் மாதத்தில் வருவது வழக்கம். தற்போது உறை பனியை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், மலைப்பாதைகளில் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.