கொடைக்கானலில் பேருந்துகள் இயக்குவதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு ஏசி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாதாரண அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏசி அரசு பேருந்து ஓட்டுனர் அந்த பேருந்தை தாமதமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
தாமதமாக பேருந்தை இயக்குவதால் அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
‘உங்களுடைய நேரத்திற்கு ஏன் ஏசி பேருந்தை இயக்கவில்லை என்று அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுனரும், கண்டக்டரும் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செருப்புகளால் தாக்கி கொண்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் கொடைக்கானல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் இருந்த நிலையில், முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் தாகத வார்த்தைகளை பேசி கேட்டு கொண்டனர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.