கொடைக்கானல் மலை சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கார் ஒன்று பண்ணைக்காடு பிரிவு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதமாக கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
மேலும் படிக்க: கோவை மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டை அடைக்க உத்தரவு : மே 31 வரை காவல் நீட்டிப்பு!
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி மற்றும் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தாண்டிக்குடி போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.