கொடைக்கானலில் மீண்டும் உறைபனி தொடர்ந்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான உறை பனி நிலவி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்த வாரம் கொடைக்கானல் மலை பகுதியில் பகலில் கடும் வெயிலும் மாலை வேளையில் குளிரும் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் இன்று மீண்டும் உறை பனி காணப்பட்டது. ஏரி சாலை, ஜிம்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதர்களில் பனி படர்ந்து காணப்பட்டது. மேலும், வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் கீழ் பதிவாகி உள்ளது. திடீரென மாறிய காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
சுற்றுலாவை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் வித்தியாசமான காலநிலையை ரசித்து வருகின்றனர். தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் ஜனவரி இறுதி மாதம் வரை மட்டுமே இருக்கும் உறை பனி, தற்போது பிப்ரவரி மாதத்தில் நிலவி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தி உள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.