கொடைக்கானலில் தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், 5 கி.மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குறிப்பாக, தொடர்பு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.
தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல் மலைச்சாலை முழுவதிலுமாக கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு உள்ளது. பிரதான சாலைகளான வத்தலகுண்டு பிரதான சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி சாலை, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி சாலை, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 கிமீ தொலைவு வரையில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து மெல்ல ஊர்ந்து வருகிறது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், சுற்றுலா பயணிகள் சில இடங்களில் நடந்து செல்லும் நிலை உள்ளது. கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, தொடர் விடுமுறை என்பதாலும் சீசன் ஆரம்பிக்க உள்ள நிலைகள் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
This website uses cookies.