நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்துறை ஹட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி, ஷோபனா, தம்பதியினர். இவர்களுக்கு பிரணவ் (7), லயா (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லயா கேர்கம்பை பகுதியில் உள்ள இல்போர்ட் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.
வழக்கம் போல நேற்று மாலை பள்ளி விட்டதும் பள்ளி வாகனத்தில் குழந்தை லயா, சொந்த ஊரான கூக்கல்துறைக்கு வந்துள்ளார். வாகனத்தை கூக்கல் பகுதியை சேர்ந்த சஞ்சை என்பவர் ஓட்டி வந்துள்ளார். வீட்டின் அருகே வந்தவுடன் வாகனத்தில் இருந்து இறங்கிய லயா, வாகனத்தின் பின்புறத்தில் சென்றதாக தெரிகிறது. இதனை கவனிக்காத வாகன ஓட்டுநர், வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை லயா பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளி வாகனத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஒருவர் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, தகவல் அறிந்த கோத்தகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த குழந்தை லயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஓட்டுநர் சஞ்சை தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.