கோவையை சேர்ந்த தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்கிற்கு இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்படுகிறது.
மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ஏற்படுத்தப்பட்டு தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அவருக்கு இந்த விருதை முதலமைச்சர் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவராக உள்ள கோவையை சேர்ந்த முகம்மது ரபீக் கடந்த ஊரடங்கு காலத்தின் போது சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்,வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவது, தொடர்ந்து மத நல்லிணத்திற்காக பாடுபடுவது உள்ளிட்ட சேவைகளை செய்து வரும் முகம்மது ரபீக்கிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.