தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மனைவி ஜோதியம்மாள் (25). மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த 22ஆம் தேதி கயத்தாறில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாடுகளை மேய்க்கச் சென்றுள்ளார். இந்த நிலையில், ஜோதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜோதியம்மாளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கேனவே ஜோதியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜோதியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜோதியம்மாள் உடல் உடற்கூறாய்வு முடித்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இளம் பெண் மர்ம மரணத்தின் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரியும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அவரது உறவினர்கள் ஜோதியம்மாள் உடலுடன் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து கயத்தார் தாசில்தார் பேச்சிமுத்து, டி.எஸ்.பி. உதயசூரியன் ஆகியோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், நிவாரண தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.