கோவில்பட்டி அருகே பட்டா மாறுதலுக்காக ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே .சிதம்பராபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் ராகவன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சப் டிவிஷன் செய்ய விண்ணப்பம் செய்துள்ளார்.
சப் டிவிஷன் செய்து தர கே. சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராகவன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிவுறுத்தலின்படி ராகவன், ரூ. 14 ஆயிரத்தை வழங்கியுள்ளார். அப்போது, அங்கு இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.