Categories: தமிழகம்

புள்ளய காப்பாத்துங்க.. மினி பேருந்தின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சிறுவன்..!

சூளகிரி அருகே 3 வயது சிறுவன் மினி பேருந்தின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில்,மினிபேருந்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணம்மாகொத்தூர் என்ற கிராமத்தில் இன்று காலை தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்க்காக தாய் திவ்யா (28) மினி பேருந்தின் ஏறவந்த போது இவரின் 3 வயது மகனான கிரிவாஸ் என்ற சிறுவன் பேருந்தின் குறுக்கே ஓடிவந்த நிலையில் எதிர்பாராத விதமாக மினி பேருந்தின் முன்பக்க டயர் சிறுவன் மீது ஏறியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து கிராம மக்கள் மினி பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , ஓட்டுனர் ரூபேஷ்குமாரை பலமாக தாக்கியுள்ளார்.

இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மினி பேருந்தின் டயரில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்க்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் மினி பேருந்தின் டயரில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த 6 பேர் அதிரடி கைது : வனத்துறை போட்ட ஸ்கெட்ச்!

கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…

6 minutes ago

மதுபோதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. திடீரென துப்பாக்கியால் சுட்ட நண்பன் : அதிர்ந்து போன திருச்சி!

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…

20 minutes ago

AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்

நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…

23 minutes ago

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

1 hour ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

1 hour ago

This website uses cookies.