கிருஷ்ணகிரி : என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டவரை நம்ப வைத்து கழுத்தருத்து விட்டார்கள் என்றும், ஒருத்தரையும் விடாமல் தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று ஆணவக்கொலை செய்யப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஜெகனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்று சட்ட சபையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது.
இந்த நிலையில், நேற்று செய்தியாளருக்கு பேட்டியளித்த ஜெகனின் மனைவி 4 வருடமா காதலித்தோம், கல்யாணம் ஆகி 2 மாதம் கூட ஆகவில்லை. அப்பா, அம்மா நியாபகம் வராமல் என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டார். வீட்டு நியாபகம் வந்து நான் அழுதால் என் கணவரும் என்னுடன் சேர்ந்து அழுவார். உனக்கு அப்பா, அம்மாவா நான் இருக்கிறேன் என கூறினார். எங்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார்கள். ஒருத்தரையும் விடாதீர்கள், தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்.
என் பிள்ளையை துடிக்க துடிக்க வெட்டி விட்டார்கள். என்னை மேஸ்திரி வேலை செய்ரவனுக்கு கொடுக்க மாட்டேன் என கூறினார்கள். 4 வருடங்களில் பல முறை நான் கேட்டு அடி வாங்கி இருப்பேன். ஆனால் ஒரு முறையும் மனசு உருகலையே. நான் கேட்கும் போதெல்லாம் என் அம்மா என் முகத்தில் எட்டி எட்டி உதைப்பார், என கண்ணீருடன் தெரிவித்தார்.
தொடர்ந்து உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் தரப்பில் ஜெகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், ஜெகனின் மனைவி சரண்யாவுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.