கிருஷ்ணகிரி : என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டவரை நம்ப வைத்து கழுத்தருத்து விட்டார்கள் என்றும், ஒருத்தரையும் விடாமல் தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று ஆணவக்கொலை செய்யப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஜெகனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்று சட்ட சபையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது.
இந்த நிலையில், நேற்று செய்தியாளருக்கு பேட்டியளித்த ஜெகனின் மனைவி 4 வருடமா காதலித்தோம், கல்யாணம் ஆகி 2 மாதம் கூட ஆகவில்லை. அப்பா, அம்மா நியாபகம் வராமல் என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டார். வீட்டு நியாபகம் வந்து நான் அழுதால் என் கணவரும் என்னுடன் சேர்ந்து அழுவார். உனக்கு அப்பா, அம்மாவா நான் இருக்கிறேன் என கூறினார். எங்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார்கள். ஒருத்தரையும் விடாதீர்கள், தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்.
என் பிள்ளையை துடிக்க துடிக்க வெட்டி விட்டார்கள். என்னை மேஸ்திரி வேலை செய்ரவனுக்கு கொடுக்க மாட்டேன் என கூறினார்கள். 4 வருடங்களில் பல முறை நான் கேட்டு அடி வாங்கி இருப்பேன். ஆனால் ஒரு முறையும் மனசு உருகலையே. நான் கேட்கும் போதெல்லாம் என் அம்மா என் முகத்தில் எட்டி எட்டி உதைப்பார், என கண்ணீருடன் தெரிவித்தார்.
தொடர்ந்து உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் தரப்பில் ஜெகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், ஜெகனின் மனைவி சரண்யாவுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.