Categories: தமிழகம்

தொடர்ந்து கிராமத்திற்குள் உலா வரும் கொம்பன்… தலைதெறிக்க துரத்திய ஒற்றை காட்டு யானை ; பறிபோன உயிர்..!!!

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அப்பைய்யா (54). இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கிராமத்தை ஒட்டியுள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ரோஜா செடிகளை பயிரிட்டு இருந்தார். அவ்வப்போது தோட்டத்திற்கு சென்று அதனை பார்த்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து வெளியேறிய அப்பைய்யா தன்னுடைய விவசாய தோட்டம் அருகே சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை அப்பைய்யாவை துரத்தி சென்று மிதித்து தாக்கி உள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த கிராம பொதுமக்கள், இது குறித்து ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், அவரது உடலை பார்த்து அவரது உறவினர்கள் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை வளாகத்திலும் அப்பைய்யாவின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் தளி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காலை நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேடுமுத்துக்கோட்டை, அகலக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி, ஜவளகிரி, செட்டிப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை ஏற்கனவே அப்பகுதியில் 2 விவசாயிகளை தாக்கி கொண்டுள்ளது. தற்போது மேலும் ஒரு விவசாயி இன்று காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதியினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

திடீரென டிராக்கை மாற்றும் அஜித்.. டென்ஷனான GBU டீம்!

ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…

3 minutes ago

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

11 hours ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

12 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

13 hours ago

அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

13 hours ago

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

14 hours ago

This website uses cookies.