கன்னியாகுமரி: புதுக்கடை அருகே வாடகை வீட்டில் விபச்சாரம் நடத்திய வாலிபர் மற்றும் அழகியை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் வாலிபர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் அரைகுறை ஆடையுடன் இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட இளம்பெண் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், வாலிபர் அருமனை பகுதியை சேர்ந்த கனிஸ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது வாடகைக்கு வீடு எடுத்து வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் வாடகை வீடு எடுத்து விபச்சாரம் செய்து வந்தவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.