கும்பகோணம் மேற்கு காவல்நிலைய வளாகத்தில் காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் செக்காங்கண்ணியை சேர்ந்தவர் ஜான் பென்னி (49). இவர் ஆட்டோ ஓட்டுநர், இவரது மகன் பிரவின்குமாரை மேற்கு காவல்துறையினர், வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் காவல்துறையை கண்டித்து பிரவின் குமாரின் தந்தை ஜான் பென்னி, மேற்கு காவல்நிலைய வளாகத்தில் உடலில் மண்ணென்னையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தீக்காயம் அதிகமாக இருப்பதால், மருத்துவமனையில் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து, தனது மகன் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு வருவதாக ஜான் பென்னி தெரிவித்தார். பிரவின்குமார் மீது ஆயுத தடைச் சட்டம், வழிப்பறி போன்ற மூன்று வழக்குகள் நிலுவையில் உளளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.