ஈரோடு : தாளவாடி பகுதியில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்ட பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.
இதே போல் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை அவ்வப்போது வாகனங்களை துரத்தி வருகிறது.
மேலும் பகல் நேரங்களில் ஊருக்கு உலா வருகிறது. அதனைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட கிராமங்களில் இரண்டு விவசாயிகளை தாக்கிய கருப்பன் என்கிற ஒற்றை காட்டு யானை தற்போது விவசாய நிலங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.
மேலும் விவசாயிகளையும் துரத்தி வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, ராமு ஆகிய இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
இன்று முதல் கும்கி யானைகள் கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை அடர்ந்த வனப் பகுதியில் வரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.