52 ஆண்டுகளுக்கு நிரம்பிய குறிச்சி குளம்.. விவசாயிகள் டபுள் சந்தோஷம் : ஆட்சியர் ஆய்வு!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் அமைந்துள்ளது குறிச்சி குளம். 36 ஏக்கர் பரப்பளவில் இந்த குளம் அமைந்துள்ளது.
1972 ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக குறிச்சி குளம் நிரம்பியது. அதன் பிறகு சரியான அளவு மழைப்பொழிவு இல்லாததால் குளம் நிரம்பாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு அதிக அளவில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி 118.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதன் காரணமாக ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் தற்போது நிரம்பி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று குறிச்சி குளத்தினை நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க: மணீஷ் சிசோடியா அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆதாரங்கள் இருக்கு.. ஜாமீன் வழக்கில் நீதிபதி ட்விஸ்ட்!
ஆய்வினைத் தொடர்ந்து தண்ணீரை முறையாக பயன்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.