“திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என எம்எம்ஏ செளந்திரபாண்டியன், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம், திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் , பத்திரப்பதிவு கட்டிடம் அமைப்பதற்கான இடம் அரசு அதிகாரிகள் ,மண்டல தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள் ,உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக ஆய்வு மேற்கொண்டது குறித்த புகைப்படங்க பதிவுச் செய்திருந்தார்.
அமைச்சர் கே என் நேருவின் பதிவிற்கு லால்குடி எம்எல்ஏ செளந்திரபாண்டியன், தன்னை எந்தவித அரசு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை மேலும் தனது தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் ,பத்திரபதிவு அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்காக இடங்களை ஆய்வு மேற்கொண்ட போது அழைக்காத காரணத்தினால் இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டு அதிரடித்துள்ளார்.
லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் கடந்த நான்கு முறை எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார் கடந்த தேர்தல்களில் திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் திமுக எட்டு தொகுதிகளை இழந்த பொழுதும் இவர் மட்டுமே லால்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வதந்திகள் பரவி திமுகவினரிம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் கே என் நேரு மற்றும் சௌந்தரபாண்டியன் இருவரையும் நேரில் அழைத்து சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போதைய முகநூல் பதிவு குறித்து திமுக வட்டாரங்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது இது முதல்வரின் பார்வைக்கு சென்று இதற்கான தீர்வு எட்டப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.