இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு அடியாட்களுடன் சென்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை அடுத்துள்ள மணலி புதுநகரைச் சேர்ந்த ரிஷி என்பவர் 2019ல் இடம் ஒன்று வாங்கியதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ஷகிலா என்பவர் அதே இடத்தை உரிமைக் கொண்டாடியதாகவும், இது தொடர்பான வழக்கு பத்திரப்பதிவு அலவலகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஷகிலா இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபுவை தொடர்பு கொண்டு முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: உதயநிதிக்கு என்ன யோக்கிதை இருக்கு..? திமுக அரசை கையை நீட்டி கோபத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் ; ஆர்பி உதயகுமார்
அதன்பேரில், பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு, வழக்கறிஞர்கள் எனக் கூறப்படும் 10க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சென்று, ரிஷியின் தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைய முயற்சித்ததாகவும், முகத்தில் துணியைக் கட்டியபடி, அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிஷி மணலி புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2007ம் ஆண்டு உரிமையாளரான திருவெற்றியூரைச் சேர்ந்த ரவீந்திரன், ரேவதி உள்ளிட்டோரிடம் இருந்து இந்த இடத்தை முறைப்படி வாங்கியதாகவும், ஆனால், இவர்களின் உறவினர் எனக் கூறப்படும் ஷகிலா இடத்தை உரிமை கோரி மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட ரிஷி தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.