கொடைக்கானல் தாண்டிக்குடி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தடுப்பு சுவர்கள் இடிந்து சாலை சரிந்து போக்குவரத்து பாதிப்பு, வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல் துறை தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கன மழையானது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
இதனையடுத்து கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் பட்டலங்காடு என்ற இடத்தில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து, சாலை சரிந்துள்ளது.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் காவல் துறையினர் அனுமதித்து வாகனங்கள் செல்வதற்கு தாண்டிக்குடி காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் சரிந்துள்ள சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக காமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கானல்காடு கிராமத்தில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.