சேலம் : மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் தமிழுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவ படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன் என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்தனர்.
அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் அருகே ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
This website uses cookies.