நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் எட்டுப்பட்டி கிராம மக்கள், கடந்த 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வந்துள்ளனர்.
வெண்ணந்துாரை அடுத்துள்ள அத்தனுார், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனுார்புதுார், தட்டான்குட்டைபுதுார், ஆலங்காடுபுதுார், உடும்பத்தான்புதுார், தாசன்புதுார் ஆகிய எட்டு கிராமங்களில் கடந்த 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. இந்த கிராமங்களில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை பிரதான தொழிலாக இருக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, நிலச்சுவான்தாரர் ஒருவர் பொங்கல் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடியதாகவும், அந்த சமயம் ஊரில் உள்ள பெரும்பாலானோருக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ஊர் மக்கள் பிரசித்தி பெற்ற அத்தனுார் அம்மனிடம் முறையிட்டனர்.
அப்போது, அங்குள்ள ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளார். பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் தான் ஊரில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அம்மை நோய் வந்துள்ளதாகவும், இனிமேல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என சொன்னதாக அப்பகுதியில் கூறுகின்றனர்.
எனவே, மக்கள் மற்றும் கால்நடைகளின் நலன்கருதி இந்த எட்டு கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு செய்து பின்பற்றி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.