நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர் வழிமறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அடுத்த கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை, கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து உள்ளார். பின்னர், அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
பின்னர், இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் உயிரிழந்தார்.
பின்னர், இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார், விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக, கடந்த ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோட்ராங்குளம் பகுதியில் சொத்து பிரச்னை காரணமாக நடைபெற்ற கொலைக்கு, பழிக்குப் பழியாக சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி கொன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கொலை செய்த மாயாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபரிடம் ஆசை காட்டி ரூ.1.70 கோடி மோசடி : கணவரை சிக்க வைத்து எஸ்கேப் ஆன மனைவி !
முன்னதாக, நேற்று காலை பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாசல் முன்பு மாயாண்டி என்ற இளைஞர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்தக் கொலையும் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.