தமிழகம்

காலையில் கோர்ட் வாசல்.. மாலையில் சட்டக்கல்லூரி மாணவர்.. நெல்லையில் ஒரேநாளில் இரு கொலைகள்!

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர் வழிமறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அடுத்த கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை, கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து உள்ளார். பின்னர், அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.

பின்னர், இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் உயிரிழந்தார்.

பின்னர், இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார், விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக, கடந்த ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோட்ராங்குளம் பகுதியில் சொத்து பிரச்னை காரணமாக நடைபெற்ற கொலைக்கு, பழிக்குப் பழியாக சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி கொன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கொலை செய்த மாயாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிலதிபரிடம் ஆசை காட்டி ரூ.1.70 கோடி மோசடி : கணவரை சிக்க வைத்து எஸ்கேப் ஆன மனைவி !

முன்னதாக, நேற்று காலை பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாசல் முன்பு மாயாண்டி என்ற இளைஞர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்தக் கொலையும் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

42 minutes ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

54 minutes ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

1 hour ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

2 hours ago

கஞ்சா அடிச்சிட்டு அத செஞ்சா… அந்தரங்க வீடியோவில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் முகம் சுழிக்கும் பேச்சு!

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…

2 hours ago

இரவு பகல் பார்க்காமல் நடித்த அஜித்! ஒரே நாள்ல ரெண்டு ஷூட்டிங்… அடேங்கப்பா!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

3 hours ago

This website uses cookies.