Categories: தமிழகம்

காரில் அழைத்து சென்று வழக்கறிஞர் வெட்டிக் கொலை : விசாரணையில் திக்..திக்.. கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி டாக்டர் நித்யாவள்ளி, கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பொள்ளாச்சி செல்ல திட்டமிட்டிருந்த உதயகுமார், தனது காரில் வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், மைலேரிபாளயம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே அவரது உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது கழுத்து மற்றும் மார்பில் பல காயங்கள் இருந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த உதயகுமாரை தடுத்து நிறுத்தி அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி கோழிப்பண்ணை அருகே கொண்டு சென்று கத்திகளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பின்னர் அவரது காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. தனிப்படை போலீசார் விரைவில் கொலையாளிகளை பிடிப்பார்கள்” என்று எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.