Categories: தமிழகம்

வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு பாராட்டு விழா வைப்பது அர்ஜுன் சம்பத்துக்கு வயிறெரிய செய்யும் : முன்னாள் நீதியரசர் சந்துரு கிண்டல்..!!

கோவை : மக்களுக்காக சேவை செய்யும் அனைத்து வக்கீல்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்று கோகுல் ராஜ் கொலை வழக்கு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓம்லூர் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தந்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு தனியார் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட பல்வேறு அமைப்பினர் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதியரசர் சந்துரு கலந்து கொண்டார். இதில் முன்னாள் நீதியரசர் சந்துரு பேசியதாவது :- இந்நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. கோவை எனக்கு இரண்டாவது தாய் நகரம். சங்கர் கோகுல்ராஜ் கொலைக்கு பின் இது போன்ற நிகழ்வுகளுக்கு தனி சட்டம் வேண்டும் என சில அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ப.பா.மோகனுக்கு பாராட்டு விழா வைப்பது அர்ஜுன் சம்பத்துக்கு வயிறெரிய செய்கிறது. கோவை குண்டு வழக்கில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மோகன் ஆஜரானபோது மோகனுக்கு, சிலரால் அர்பன் நக்சல் என பட்ட பெயர் வைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாதாடினால் அந்த வழக்கறிஞரையும் சேர்ந்து இழிவு படுத்த ஒரு கூட்டம் சுற்றி கொண்டிருக்கிறது. இந்தியாவில் நீதிமன்றம் என்ற ஒன்று வந்த போது வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் எல்லாம் வெளி நாட்டவர்கள் தான். பிறகு தான் இங்கு சட்டபடிப்புகள் எல்லாம் வந்து இங்குள்ளவர்கள் சட்டத்தை படிக்க துவங்கினார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் இந்திய வழக்கறிஞர்களுக்கும் ஆங்கிலேயே வழக்கறிஞர்களுக்கும் பெரிய வாக்குவாதம் சண்டை எல்லாம் நிகழ்ந்துள்ளது. அப்போது பிரமணர்கள் தான் பெரும்பாலும் இந்த பணியில் இருந்தார்கள். தற்போது தான் அந்த காலம் மாறி வருகிறது.

முன்பு வழக்கறிஞர்கள் என்றாலே வம்சாவழியாக வந்தவர்கள் தான் இருந்தார்கள். சிறந்த வக்கீல் யார் என்றால் யாருக்கும் அச்சமில்லாமலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காசு வாங்காமல் வாதாடுபவர் தான் நல்ல வக்கீல்கள். இந்தியாவில் இருக்க கூடிய பெரும்பாலான மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். அவர்களுக்காக போராடுபவர் தான் ப.பா.மோகன். தற்போது கட்டணம் செலுத்தினால் தான் வக்கீல்கள் வாதாடுவார்கள் என்ற நிலை வந்துள்ளது. நமது அறம் அது அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காசு வாங்காமல் வாதாடி நீதி பெற்று தருவது தான் நமது அறம். அரசுக்கு எதிராக வாதாடும் போது அந்த வழக்குகளில் வெற்றி பெரும் போது எங்களை பாராட்டுவது இன்சுலின் அளிப்பது ஊக்கமளிக்கிறது. மக்களுக்காக சேவை செய்யும் அனைத்து வக்கீல்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும்.

தற்போது திறமையான வக்கீல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் இல்லை என்று தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாட கூடியவர்களையும் நீதி வழங்குபவர்களையும் நாம் உருவாக்க வேண்டும், என தெரிவித்தார்.

பின் பேசிய ப.பா மோகன் நீதியரசர் சந்துருவின் வாதாடும் விதம் குறுத்தும் அவரது இயல்பு குறித்தும் கூறினார். மேலும் தனது வழக்கறிஞர் வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொண்ட அவர், சட்டபடிப்பு படிக்கும் இளம் மாணவர்களுக்கு சில புத்தகங்களை சிபாரிசு செய்தார். இந்நிகழ்வில் ப.பா.மோகனுக்கு மாலை அணிவித்து மகுடம் சூட்டப்பட்டு பாராட்டப்பட்டது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

4 minutes ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

38 minutes ago

கத்தியை காட்டி மிரட்டி 19 வயது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தந்தையின் சபல புத்தி..!!

ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…

1 hour ago

தாக்கு பிடிக்குமா திமுக? பாஜகவின் மதுபான ஊழல் கருவி கைகொடுக்குமா?

மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ள நிலையில், இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை…

2 hours ago

60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் அமீர் கான். தற்போது ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து…

3 hours ago

திமுக அரசு பதவி விலக வேண்டும்.. வெளிநடப்பு செய்த இபிஎஸ் வலியுறுத்தல்!

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி…

3 hours ago

This website uses cookies.