கரூரில் லியோ திரைப்படத்திற்கு பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கவும், ரசிகர்கள் பாலபிஷேகம் செய்யவும் தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வருகின்ற 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. லியோ திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணையின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி நடத்த மட்டும் அனுமதி அளித்தும், காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 1:30 மணிக்கு முடிவடையும் நிலையில், நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் சுகாதார குறைபாடுகள் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமம் இன்றி உள்ளே வரவும், வெளியேறவும் போக்குவரத்து வசதிகளை சீராக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகளுக்கு முன்பு பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கவும், ரசிகர்கள் கட் அவுட்டுகள் மீது ஏறி பாலபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கங்கள் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் பட்சத்தில் புகார் தெரிவிக்க வேண்டிய உயர் அலுவலர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை திரையரங்கங்கள் முன்பு வைக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) கண்ணன் அறிவித்துள்ளார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.