சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் படுத்துக் கொண்டிருந்த காவல் நாய் ஒன்றை சிறுத்தை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த குவாரிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது கல்குவாரி உரிமையாளர்கள் வளர்த்து வரும் காவல் நாயை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று டாம் க்ரிஷர் என்ற கல்குவாரியில் புகுந்து அங்கு படுத்துக் கொண்டிருந்த காவல் நாயை தாக்க முற்பட்டபோது.
சிறுத்தையை கண்டு அச்சம் அடைந்த காவல் நாய் சத்தம் எழுப்பி தப்பித்தது. பின்னர் கல்குவாரியில் இருந்த இரண்டு காவல் நாய்கள் தொடர்ந்து சத்தம் எழுப்பிதால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறந்தது.
இதன் சிசிடிவி காட்சி வெளியாகிய தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து காவல் நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை பவானிசாகர் வனத்துறையினர் கல்குவாரி அருகாமையில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.