Categories: தமிழகம்

வனத்துறை வைத்த கூண்டில் வசமாக சிக்கிய சிறுத்தை : அச்சத்தில் இருந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் புகும் சிறுத்தைகள் அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி கடந்த சில நாட்களாக கிராமவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனத்துறையினர் புதுப்பீர்கடவு கிராமத்தில் குப்புசாமி என்பவரது தோட்டத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்து கண்காணித்து வந்தனர்.

இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கி இருப்பது கிராம மக்களுக்கு தெரியவந்தது. அதனை வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்து அதனை தற்பொழுது காராச்சிகொரை கிராமத்தில் உள்ள வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பிடிபட்ட சிறுத்தையை இன்று இரவு நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா கிராமத்தை ஒட்டியுள்ள மங்களப்பட்டி என்ற அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தைக்கு ஐந்து வயது இருக்கும் எனவும் அது ஆண் சிறுத்தை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி இருப்பது புதுப்பீர்கடவு, காராச்சிகொரை கிராம மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

55 minutes ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

2 hours ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

2 hours ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

3 hours ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

3 hours ago

This website uses cookies.