ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை 5 ஆடுகளை வேட்டையாடி கொன்றதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் விவசாயி முருகன் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.
மேய்ச்சலுக்காக தோட்டத்திற்குள் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றார். இன்று அதிகாலை சென்று பார்த்த பொழுது 5 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அனைத்து ஆடுகளின் கழுத்துப்பகுதியில் கடிபட்ட நிலையில் ரத்தம் உறிஞ்சப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் வந்து ஆய்வு செய்த போது சிறுத்தை தான் ஆடுகளை வேட்டையாடி இருப்பது தெரியவந்தது.
குடியிருப்புகள் நிறைந்த சிக்கரசம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தில் சிறுத்தை புகுந்தது வேட்டையாடியதில் 8 ஆடுகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் சம்பவங்களால் கிராம மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.