7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!
Author: kavin kumar6 February 2022, 9:05 pm
சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 34,10,882 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,759 ஆக உள்ளது. இன்று ஒரேநாளில் 23,144 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதித்த 34,10,882 பேரில் இதுவரை 32,51,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 972 பேருக்கும், கோவையில் 911 பேருக்கும், செங்கல்பட்டில் 531 பேருக்கும், திருப்பூரில் 473 பேருக்கும், சேலத்தில் 310 பேருக்கும், ஈரோட்டில் 397 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது.