Categories: தமிழகம்

கோயில் நிலத்தினை வாங்க புரோக்கர்கள் மூலம் யாரும் ஏமாற வேண்டாம்: திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை..!!

கரூர்: இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் விரைவில் கையகப்படுத்தப்படும் என திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு, திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது, ஆலயத்தில் உள்ள சிவனடியார்களை சந்தித்து நலமறிந்த அவர், பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழகத்தில் சுமார் 4000 ஏக்கர் இந்த மாவட்டத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக 2012ஆம் ஆண்டு முதல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்து அறநிலையத்துறை வருவாய் துறை பத்திரப்பதிவுத்துறை காவல்துறை மின்வாரியம் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஒருங்கிணைத்து நடவடிக்கை தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆலய சொத்துக்கள், நிலங்கள் ஏராளமானவை இருந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டு வருகின்றன.

விரைவில் கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு விடும், ஆலயத்தின் நிலம் ஆலயத்திற்கே தான் சொந்தம், ஆகையால் மக்களும் முன் வரவேண்டும். கரூர் மாவட்டத்தில் திருக்கோயில் சொத்துக்களை தெரியாமல் அனுபவிக்கின்றார்களா அவர்கள் அத்தனைபேரும் வாடகைதாரர்கள் ஆக முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

திருக்கோயிலுக்கு தொகை செலுத்த முன்வந்தால் வாடகைதாரர் ஆக கண்டிப்பாக அங்கீகரிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இதனால் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஆகவே, மீட்க கூடிய நிலையில், யாரேனும் இடைத்தரகர்களாக செயல்பட்டு இதனை நான் மீட்டுத்தருகின்றேன் என்றால் அவரை யாரும் நம்ப வேண்டாம்.

இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் யாவும் கோயிலுக்கு தான் சொந்தம், ஆகவே, மக்கள் சிந்திக்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை மக்களுக்கு கொடுக்க அரசுக்கே அதிகாரம் இல்லை, ஆகவே, சிவன் சொத்து குல நாசம், என்று உணர்ந்திட வேண்டும்.

நூற்றுக்கணக்கான ஆலயங்கள் கரூர் மாவட்டத்தில் பழுதுபட்டு உள்ளது, நிறைய சிலைகள் காணாமல் போயுள்ளது. இவைகளை கண்டறிய இதற்காக தனி குழு அமைக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஏற்கனவே முதல் நிலை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால் அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் யாரும் தப்பிக்க முடியாது. அதிகாரிகள் உயர் அலுவலர்கள் ஆதரவு உள்ளது. அரசியல்வாதிகள் ஆதரவு உள்ளது., ஆளுங்கட்சி ஆதரவு உள்ளது.,
இதுமட்டுமல்லாது பெரிய போராட்டங்களை நடத்தி தவிடு பிடி ஆக்கி விடலாம் என எண்ணங்களெல்லாம் சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரு உருவாகின்ற ஊர் என்று புராதான மிக்க கரூர் மாநகரம் பஞ்சலிங்க மூர்த்தி ஸ்தலம் ஆகும், ஆனால் இங்குள்ள பஞ்சலிங்கத்தில் ஒரு லிங்கத்தினை காணவில்லை. இது குறித்து அரசிற்கு முதல் நிலை அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தப்படும். விரைவில் காணாமல் போன லிங்கம் ஆலயத்திற்கு வந்தடையும் அதுவரை நாங்கள் போராடுவோம் என்றார்

UpdateNews360 Rajesh

Recent Posts

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

27 minutes ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

2 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

2 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

2 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

5 hours ago

This website uses cookies.