Categories: தமிழகம்

மோடி வாடகை வீட்டை தேடுகிறாரா அல்லது திமுகவினர் வேறு வீட்டுக்கு போவார்களா என பார்க்கலாம் : ஏசி சண்முகம்!!

மோடி வாடகை வீட்டை தேடுகிறாரா அல்லது திமுகவினர் வேறு வீட்டுக்கு போவார்களா என பார்க்கலாம் : ஏசி சண்முகம்!!

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய நீதி கட்சி சார்பில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

இதில் மொத்தம் 130 நிறுவனங்கள் பங்கேற்று 2858 நபர்கள் பதிவு செய்தனர் இதில் 1689 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் 546 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் வழங்கினார்

பின்னர் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்

ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆந்திரா அரசு கட்டக் கூடியது மிகப்பெரிய அணை அந்த அணையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் காவேரி பிரச்சனை எம்ஜிஆர் காலத்திலேயே வந்தது அப்போதைய முதல்வர் குண்டூ ராவ் எம்ஜிஆர் தொலைபேசியில் பேசி அவரது வீட்டிற்குச் சென்று எனக்கு சாப்பாடு வேண்டாம் என் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியவுடன் உடனே தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட்டனர் ஆந்திர முதலமைச்சரை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தால் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் நட்புறவோடு அருகே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ஆனால் அதை செய்ய இந்த அரசு தவறுகிறது

மோடி வாடகை வீடு எடுத்து தங்கினால் கூட தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என எம்.பி.கனிமொழி கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, பிரதமர் மோடி வாடகை வீடு தேடுகிறாரா இவர்கள் வேறு ஏதாவது வீட்டை தேடுகிறார்களா என்பது தேர்தல் முடிந்தவுடன் தெரிந்து விடும் மோடி அவர்களுக்கு குடும்பம் இல்லை என்பது குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.

குடும்பம் இல்லாத ஒருவர்தான் நாட்டை நல்வழிப்படுத்த முடியும் குடும்பம் இருந்தால் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டும் மற்றும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் குடும்பம் இல்லாத ஒரு மனிதன் இந்தியாவின் தலைவராக இருப்பது பெருமை தான் அப்போதுதான் நேர்மையான ஆட்சி நடத்த முடியும் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முடியும் 13 வது இடத்த்தில் இருந்த பொருளாதாரத்தை 5 வது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் தேர்தல் முடிந்தவுடன் மூன்றாவது இடத்திற்கு வரும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலையில் வரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு மேல் பிஜேபிக்கா மற்ற கட்சியினருக்கு போட்டி என்பதுதான் தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பதற்காகதான்

பாஜகவிற்கும் புதிய நீதி கட்சிக்கும் கூட்டணியில் இணைய இருக்கும் கட்சிகளோடு சேர்ந்து மக்களோடு தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம் இந்த கூட்டணிக்கு பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை தேர்தலுக்கு பிறகு பார்ப்பீர்கள் திமுகவை மதிமுகவும் 30 ஆண்டு காலம் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில் மாற்று சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது

பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது அமமுக ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதைப்பற்றி இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என கூறினார்

இந்தியா கூட்டணியில் கமலஹாசனுக்கு ராஜ்யசபா சீட் வழங்கி நல்லது தான் கமலஹாசன் எனக்கு நெருங்கிய நண்பர் அவருக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்திருப்பதை அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

10 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

11 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

13 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

14 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

14 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

15 hours ago

This website uses cookies.